ஆப்கனிஸ்தானில் தலைநகர் காபூலில் குண்டு வெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆப்கான் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தற்கொலை படையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மசூதியில் ஏராளமான தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Tags :