இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

by Staff / 13-04-2023 03:41:09pm
இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, சென்னியவலசு, பீரங்கி மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(30). இவரது மனைவி ஆர்த்தி(21). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆர்த்தி பல்வேறு இடங்களில் அதற்காக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.இருந்த போதும் வயிற்று வலி குணமாகாத நிலையில், மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வேட்டியில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பானது. பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via