கஞ்சா கடத்தல்  6  பேர் கைது. 4 பேர் தப்பி ஓட்டம். போலீஸ் வலைவீச்சு.

by Editor / 04-01-2023 10:57:54pm
கஞ்சா கடத்தல்  6  பேர் கைது. 4 பேர் தப்பி ஓட்டம். போலீஸ் வலைவீச்சு.

 தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.இதனைத்தொடர்ந்து காவல்த்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத்தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய 10 பேரில் வாசுதேவநல்லூர் உள்ளாறு பகுதியை சேர்ந்த காசிதுரை,(22) புளியங்குடியை சேர்ந்த மருதுபாண்டி(24)கிருபாகரன் (28),விக்னேஷ்(20),ராஜேஷ்(22) ,திருப்பதி(48) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.4  பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் அவர்களிடம்  இருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சா ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் ,ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நான்கு நபர்களை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via