சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் பலி

by Staff / 04-11-2022 04:02:05pm
சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் பலி

அந்தியூர் அருகே அத்தாணி புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் கோபிநாத் (வயது 16). இவர் அத்தாணியில் உள்ள லேத் பட்டறை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றினார். நேற்று மாலை கோபிநாத் மற்றும் அவருடைய நண்பர்களான சரவணன் (18), நவீன் (20) ஆகிய 3 பேரும் அங்குள்ள சத்தியமங்கலம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். தனியார் வங்கி அருகே சென்றபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் கோபிநாத் படுகாயம் அடைந்தார். சரவணன் லேசான காயம் அடைந்தார்.

இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று காயம் அடைந்த கோபிநாத், சரவணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோபிநாத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரக்கு ஆட்டோ டிரைவரான அண்ணாதுரை என்பவரை கைது செய்தனர். கோபி ஆஸ்பத்திரியில் சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via