.வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்

by Staff / 01-04-2024 02:53:08pm
.வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்

இங்கிலாந்தை சேர்ந்த ராயல் கல்லூரி நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த வார்டுக்கு வெளியே நீண்டநேரம் வரை வரிசையில் காத்திருந்து உள்ளனர். இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் போயும், கடந்த ஆண்டில் வாரம் ஒன்றிற்கு சராசரியாக 268 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரியில் மட்டுமே, இங்கிலாந்து மருத்துவமனைகளின் அவசரகால பிரிவில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம் என தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via