சேவியர் குமார் படுகொலை - பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்

by Staff / 24-01-2024 01:15:23pm
சேவியர் குமார் படுகொலை - பாதிரியார் நீதிமன்றத்தில் சரண்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சேவியர் குமார் (45) கடந்த சனிக்கிழமை இரவு, மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை அலுவலகத்துக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஆலய பாதிரியார் ராபின்சன், அரசு வக்கீல் மற்றும் தி.மு.க ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.ரமேஷ்பாபு உட்பட 8 பேர் தலைமறைவாகினர். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். முன்னதாக, பாதிரியார் ராபின்சன் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை குழித்துறை மறைமாவட்டம் நீக்கியுள்ளது.

 

Tags :

Share via