மருந்தகத்தில் +2 படித்த போலி மருத்துவர் கைது

by Staff / 13-04-2023 11:35:35am
மருந்தகத்தில் +2 படித்த போலி மருத்துவர் கைது

சிவகங்கை: காளையார்கோவில் அருகே அய்யுருளிதச்சன் கண்மாயைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சூசை அருள் பிளஸ் டூ படித்துள்ளார். தொண்டி சாலையில் மருந்தகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் விதிமுறையை மீறி அவர், அலோபதி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவதாகவும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கமலவாசன் தலைமையிலான அதிகாரிகள் சூசை அருளின் மருந்தகத்தில் சோதனை நடத்தினர். அவர் நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
 

 

Tags :

Share via