கிரானைட் குவாரி ஏல அறிவிப்புக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - பொது ஏல அறிவிப்பை ரத்து செய்து ஆட்சியர் அறிவிப்பு

by Editor / 29-11-2023 09:19:54pm
கிரானைட் குவாரி ஏல அறிவிப்புக்கு  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - பொது ஏல அறிவிப்பை ரத்து செய்து ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில், அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள தகுதிவாய்ந்த பலவண்ண கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏல அறிவிப்பு மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு :03.10.2023-ல் வெளியிடப்பட்டு 31.10.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதனையடுத்து கிரானைட் குவாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்திவந்த நிலையில் நிர்வாக காரணத்தினால் 31.10.2023 அன்று நடைபெற இருந்த பொது ஏலம், ஒரு மாத கால அளவிற்கு ஒத்திவைக்கப்பட்டு, 30.11.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது, நிர்வாக காரணங்களால் பொது ஏலம் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Tags : கிரானைட் குவாரி ஏல அறிவிப்புக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - பொது ஏல அறிவிப்பை ரத்து செய்து ஆட்சியர் அறிவிப்பு

Share via