காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குரு வந்த் சிங் பன்னூனை கொலை செய்த வழக்கில் நிகில் குப்தா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கா மன் ஹாட்டன் நீதிமன்றத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குரு வந்த் சிங் பன்னூனை நியூயார்க்கில் கொலை செய்த வழக்கில் இந்தியரான நிகில் குப்தா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கூலிக்கு கொலை செய்ய சதி செய்தல் மற்றும் பண மோசடி செய்ய சதி செய்து ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார் .மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நீதிபதி சாரா நெட் பர்ன் முன்னிலையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதற்கு முன்பு அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த வந்தார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு 40 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் . இறுதி தீர்ப்பு மே 29, 2026 அன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலை செய்ய ஒரு கொலையாளிக்கு 15 ஆயிரம் டாலர் முன்பணமாக குப்தா வழங்கியவை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இவர் 2023 செக் குடியரசில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்காவசம் ஒப்படைக்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இந்திய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க தரப்பு குற்றம் சாட்சி வந்ததை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது.
Tags :



















