குளிக்கும் படத்தை தோழிக்கு அனுப்பிய இளம்பெண் - விளையாட்டு வினையான விபரீதம்.

by Writer / 08-01-2022 09:04:36am
குளிக்கும் படத்தை தோழிக்கு அனுப்பிய இளம்பெண் - விளையாட்டு வினையான விபரீதம்.

இளம்பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து அதை தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பி வில்லங்கத்தை விலைக்கொடுத்து வாங்கிக்கொண்டார்.

கன்னியாகுமரில் இளம்பெண் ஒருவர் தோழிக்கு அனுப்பிய குளியல் புகைப்படம் பிரச்சினையில் முடிந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தோழி மற்றும் தோழியின் நண்பன் மீது புகார் கொடுத்துள்ளார். கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது தோழியுடன் மிகவும் நெருங்கிப்பழகி வந்துள்ளார்.சிறு வயது முதலே பழக்கம் என்பதால் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இந்த இளம்பெண் ஒருநாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக போனில் படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகளை அவர் உடனே டெலிட் செய்திருந்தால் எந்த வில்லங்கமும் வந்திருக்காது.

செல்போனில் படம் பிடித்ததை தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார். அவர் அதனை பார்த்துவிட்டு டெலிட் செய்துவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால்  அந்தப்பெண்ணோ தனது தோழியின் அந்தரங்கப்படம் எனத் தெரிந்தும் அதனை தனது ஆண் நண்பரான ஜாக்சன் என்பவருக்கு அனுப்பியுள்ளார். 

 இதனையடுத்து அந்தப்பெண்ணுக்கு தேவையில்லாத பிரச்னைகள் எழுத் தொடங்கியது.

ஜாக்சன் அந்த புகைப்படத்தை காட்டி அந்தப்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். அப்போது அந்த பெண் ஜாக்சனிடம் கடுமையான நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்தப்படத்தை ஜாக்சன் வேறு சிலருக்கு அனுப்பியதாக தெரிகிறது. நாளுக்கு நாள் அந்தப்பெண்ணுக்கு தொல்லை அதிகரிக்க வே இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான, அந்தப்பெண் கருக்கல் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தோழி, அவரது நண்பர் ஜாக்சன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் இது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via