சிறையில் போக்சோ கைதி திடீர் பலி

by Staff / 01-06-2023 01:14:17pm
சிறையில் போக்சோ கைதி திடீர் பலி

திருப்பூர் அருகே ஊத்துக்குளியை சேர்ந்தவர் கருப்பன் (72). இவர் போக்சோ வழக்கில் கைதாகி கடந்த 2018ஆம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27ஆம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனை சிறை கைதிகளுக்கான வார்டில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

 

Tags :

Share via