உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அடி, உதை

by Staff / 01-06-2023 01:02:08pm
 உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அடி, உதை

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில், சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது கார் ஓட்டுநர் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. காரின் ஃபாஸ்ட் டேக் வேலை செய்யாததால், ஓட்டுநரிடம் பணம் தருமாறு ஊழியர்கள் கேட்டுள்ளனர். இதனால், ஃபாஸ்ட் டேக்கில் இருந்த பணத்தை கழிக்க வேண்டும் என டிரைவர் வாதிட்டார். பின்னர், தனது நண்பர்களை அழைத்து சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கினார். சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கேட்டும் உடைக்கப்பட்டது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via