கனமழை - உடைந்து விழுந்த ஆங்கிலேயர் காலத்து பாலம்

by Staff / 07-07-2024 02:57:43pm
கனமழை - உடைந்து விழுந்த ஆங்கிலேயர் காலத்து பாலம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ராணிக்கேத் நெடுஞ்சாலையில் இருந்த 80 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் காலப் பாலம் உடைந்தது. பாலம் இடிந்து விழுந்ததையடுத்து, நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து இன்றும் அம்மாநிலத்தில் கனமழை பெய்யும் என கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via