எல்லாச்சத்துமுள்ள  கிழங்கு

by Writer / 09-01-2022 11:32:01am
எல்லாச்சத்துமுள்ள  கிழங்கு

எல்லாச்சத்துமுள்ள  கிழங்கு
தமிழர்களின் அறுவடை பண்டிகையாம் பொங்கல் ..தைத்திங்களில் பிறந்தாலும் அதனை ஒட்டியே விவசாயமும் நடைபெறும்..தை மாத்தின் சிறப்பு .அக் காலத்தில்  நாட்டுப்பழங்களில் வாழையை தவிர பிற பழங்கள் விளைவதில்லை.இந்த பொழுதுகளில்  கிழங்கு வகைகள் தான் அதிகம் விளைவிக்கப்படும் நம் பாரம்பரிய கிழங்குகளில் சிறு கிழங்கு இப்பொழுதுதான் விளையும் .இதே போன்றே  பனங்கிழங்கும்.

தை மாதத்தில் விளையும் ஒவ்வொரு காய்கறிகளும் கிழங்குகளும் அற்புதமானவை.அவற்றில் ,மண்ணில்  பனங்கிழங்கும்தான் தினம் கொப்பரையில் வெந்து கொண்டிருக்கும்  ,அந்த காலத்தில்.. அவித்த கிழங்கை காய வைத்து  பத்திரப்படுத்தி முறுக்கு போன்ற நொறுக்குத்தீனியாக சாப்பிட்டு..கருப்பட்டி காபி குடிப்பது என்பது அன்றைய தமிழரின் நடைமுறை ,..அதுவும்,குறிப்பாக,தெற்கத்தி மக்கள் இதை விரும்பியே சாப்பிட்டுவருவர்.இன்றைய தலைமுறையினரிடம் பனங்கிழங்கு உடம்புக்கு நல்லது என்று சொன்னால் நம்மை பரிதாபமாகப்பார்க்கிறார்கள்.அதிலிருக்கும் அத்தனை சத்துக்கள் பற்றி சொன்னால் நம்மை அலட்சியமாகப்பார்க்கிறார்கள்

இயற்கையை நேசித்து, இயற்கையோடு வாழ்ந்த தலைமுறையினருக்குத்தெரிந்த அற்புதங்கள்.இன்றைய தலைமுறைக்கு எப்பொழுது புரிய போகிறதோ..பார்ப்போம.பல காய்கறிகளையும் நம்நாட்டுப்பழங்களையும இந்த தலைமுறை சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்லை. பனங்கிழங்கில் அப்படி என்ன இருக்கிறது. இரும்புச்சத்து, புரத சத்து, கால்சியம், மெக்னீசம், கிளைசெமிக்இண்டெக்ஸ்,ஆன்டிஆக்ஸிடன்,ஒமேகா-3பேக்ட்டி ஆசிட்டி  ஆகியவை இருப்பதால்,புற்றுநோய்,மலச்சிக்கல்,எலும்பு ,பக்கவாதம்,,குடல் இறக்கம்,கெட்ட ெகாழுப்பு,தசை சார் பிரச்சனை,நீரழிவு போன்ற பல்வேறு உடல் பிரச்சனைகளை அகற்றும் அரும்மருந்தாக பனங்கிழங்கு உள்ளது.

 

 

 

Tags :

Share via