வேலூர், சி.எம்.சி.யில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக இந்தாண்டில் இன்று ஒருநாள் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது.தமிழகத்தில் பெயர்பெற்ற வேலூர் மருத்துவமனையில் சுமார் 10,000 பேர் பணியாற்றும் நிலையில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் 200 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனோ உள்ளிட்ட சிகிச்சைக்காக இணையதளம் மூலமாக முன்பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மருத்துவமனைக்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
Tags :