லாரி - கார் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி

by Staff / 15-04-2023 01:56:52pm
லாரி - கார் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி

தென்காசி மாவட்டம் குலசேகரப்பேரியை சேர்ந்தவர் முகேஷ் (25). இவரது உறவினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பேச்சியம்மாள் (17). இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவிற்காக சென்றனர். திருவிழா முடிந்ததையொட்டி இன்று காலை அவர்கள் மீண்டும் காரில் ஊர் திரும்பினர். காரை முகேஷ் ஓட்டிச்சென்றார். இதற்கிடையே சிவகிரியில் இருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் மேலப்பட்டிக்கு ஒரு லாரி சென்றது. அதனை சிவகிரி கீழ கரிசல் குளத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் ஓட்டினார். இளைய ரசனேந்தல் அருகே உள்ள நத்தலமுத்தம்பட்டி பகுதியில் சென்றபோது லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் காரில் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முகேசும், பேச்சியம்மாளும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாலாட்டின் புதூர் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று காரில் சிக்கிய  2 பேரின் உடல்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து  நாலாட்டின்புதூர் போலீஸ் இனஸ்பெக்டர் சுதாதேவி வழக்குப் பதிந்து லாரியை ஓட்டிவந்த   தென்காசி மாவட்டம்   கீழ கரிசல்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த  செண்பகராஜ் மகன் முனீஸ்வரன் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via