காங்கிரஸ் கட்சியின் தவைராக சோனியா காந்தியே நீடிப்பார்

by Writer / 13-03-2022 10:04:24pm
காங்கிரஸ் கட்சியின் தவைராக சோனியா காந்தியே நீடிப்பார்

 


இன்று டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைமையக்தில் நடந்த செயற்குழுக்கூட்டம் 4.00மணிக்கு தொடங்கி ,நான்கு மணிநேரம்  நடந்தது..ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சியை மீட்பதற்காகவும் கட்சிக்கு
புதிய தலைவரை நியமிப்பதற்காகவும் கூடிய கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.செப்டம்பர் 20ல் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அதுவரை சோனியா காந்தியே  தலைவராக நீடிப்பார்  என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரும்பான்மை தலைவர்கள் ராகுல்காந்தியே தவைராக நியமிக்கப்படவேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். நாற்பது ஆண்டுகாலம் நேரு குடும்பத்திலிருந்து இதுவரை ஒருவர் கூட பிரதமர் ஆக வில்லை என்றும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கும் வல்லமை ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது என்கிற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via