3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

by Staff / 09-08-2023 02:33:22pm
 3 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அன்று காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்ட மன்ற தொகுதிக் குட்பட்ட களியக்காவிளை யிலிருந்து தனது நடை பயணத்தை தொடங்கும் அவர், அன்று மதியம் குழித்துறையில் சிறப்புரை ஆற்றுகிறார். பின்பு அன்றையதினம் மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணியில் இருந்து நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை, இரவிபுதூர்கடையில் சிறப்புரை ஆற்றுகிறார். 17-ந்தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட மணலியில் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பகுதி வில்லுக்குறியில் சிறப்புரை ஆற்றுகிறார். 18-ந் தேதி காலை நாகர்கோவில் நகரில் வேப்பமூடு காமராஜர் சிலைக்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக் குட்பட்ட கொட்டாரத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தில் அண்ணாமலை சிறப்புரையாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அண்ணா மலை நடைபயணம் மேற்கொண்டுள்ளதால், குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்ப டுத்த பா. ஜ. க. நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.

 

Tags :

Share via