பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருவதாக தேதிமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் குற்றச்சாட்டு.

by Editor / 16-03-2022 05:48:47pm
பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருவதாக  தேதிமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஆய்க்குடி பகுதிக்கு கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்த திமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது-

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அதன் பின் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முன்பு உள்ளதை விட தற்போது குறைந்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆங்காங்கே பாலியல் தொல்லைகள் என்பது நடைபெற்று தான் வருகிறது..போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து மருத்துவ படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நீட் தேர்வு என்பது நடத்தப்படுமா? என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும், எதிர்காலத்தில் தேமுதிக தமிழகத்தை ஆளும் எனவும் விஜயகாந்த் தற்போது நலமுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 

Tags : Vijaya Prabhakaran, son of Date leader Vijayakanth, has alleged that sexual harassment is taking place.

Share via