பாட்டி, பேத்தி உயிரிழப்பு மர்ம மரணம்

by Staff / 21-03-2022 11:01:43am
 பாட்டி, பேத்தி உயிரிழப்பு மர்ம மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச்  சேர்ந்த மணிவண்ணன். இவருடைய தாய் லட்சுமி மற்றும் மூன்று வயது குழந்தை ரக்சனா ஆகிய இருவரும் வீட்டிற்கு அருகில் கிடந்த  குளிர்பானத்தை  குடித்ததால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லும் வழியில் ரக்சனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியின் பாட்டி  லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
தனது வீட்டின் எதிரில் கிடந்த குளிர்பானத்தை குடித்து மூன்று வயது குழந்தை மற்றும் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து வடபொன்பரப்பி காவல் துறையினர் குளிர்பானத்தில் விஷம் ஏதேனும் கலக்கப்பட்டு உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via