உத்திரபிரதேச மாநிலத்தில்  இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்;  கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலி

by Editor / 18-05-2021 05:37:10pm
உத்திரபிரதேச மாநிலத்தில்  இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்;  கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலி



உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் வசிக்கும் கிரிகோரி என்பவரின் 24 வயதான இரட்டை மகன்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஃப்ரெட் வர்கீஸ், ரால்ஃபிரட் ஜார்ஜ் என்ற இரட்டை பொறியியல் பட்டதாரிகள், ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளனர். கொரோனா சூழல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிந்த இருவருக்கும் கடந்த மாதம் காய்ச்சல் இருந்ததன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் இருவருக்கும் நெகட்டிவ் என வந்தாலும் , மூச்சு விடுவதில் சிரமம் தொடரவே அவர்களை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். பொதுப்பிரிவில் இருந்த அவர்களுக்கு ஐசியூ பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மே 13 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஜோஃப்ரெட் உயிழந்தார். 
ஜோஃப்ரெட் உயிரழந்த 1 மணி நேரத்திற்கு பிறகு ரால்ஃபிரட்டும் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இருவரும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அவர்களது பிறந்த நாளை கொண்டாடினர். 

 

Tags :

Share via