44.வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த முதலமைச்சர் தலைமையில் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு

by Staff / 22-04-2022 03:52:17pm
44.வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த முதலமைச்சர் தலைமையில் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் நடைபெறும் 44 செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் 23 பேர் உறுப்பினராக கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 44காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சுமார் 180 நாடுகளை சேர்ந்த சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில் போட்டியை  சிறப்பாக நடத்தவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்களேஏ.வே.வேலு மெய்நதன் மதி வேந்தன் எம்பி ராசா எம் எல் கே உதயநிதி ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் உட்பட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via