மருத்துவமனைகளில் படுக்கைகள் விவரம் : ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ள வசதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இதனால், புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
எந்த மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தாலும் படுக்கை இல்லை என்ற பதிலே வருவதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை இலவசமாக அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், எந்தெந்த மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்பது தெரியாமல் நோயாளிகளை ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு மக்கள் திண்டாடிக் கொண்டிருகின்றனர்.
இந்த நிலையில், எந்த மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள இணையதள வசதியை உருவாக்கி இருக்கிறது தமிழக அரசு. https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் படுக்கைகளின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். இதனால், நோயாளிகள் மருத்துவமனைகளின் வாசல்களில் ஆம்புலன்சிஸில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். மக்களின் சிரமத்தை குறைக்க அரசு உருவாக்கி இருக்கும் இந்த இணையதள பக்கத்தில், தனியார் மருத்துவமனைகளில் படுக்கை இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
Tags :