பஞ்சர் பாத்தபோது லாரி டயர் வெடித்து வாலிபர் பலி

by Staff / 17-10-2023 01:10:49pm
பஞ்சர் பாத்தபோது லாரி டயர் வெடித்து வாலிபர் பலி

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வைப்பார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராஜா கௌதம் (18). ராஜகோபால்  நடமாடும் பஞ்சர் கடை வைத்துள்ளார். அதற்கு உதவியாக அவர் மகனும் இருந்துள்ளார். தந்தை - மகன் இருவரும் வைப்பார் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கும் முன்பு பஞ்சராகி நின்ற லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லாரி டயர் வெடித்துள்ளானது. டயர் வெடித்து சிதறியதில் ராஜா கௌதம் பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

 

Tags :

Share via