திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
விளாத்திகுளம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள கே. துரைசாமி புரம், மேல தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பாண்டி (31). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு 31 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்ற எக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :