பள்ளிக்குள் புகுந்து மாணவி மீது தாக்குதல், வாலிபர் கைது

by Staff / 13-10-2023 02:15:16pm
பள்ளிக்குள் புகுந்து மாணவி மீது தாக்குதல், வாலிபர் கைது

ஒரத்தநாடு அருகே, பள்ளி மாணவி தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் வகுப்பறையில் புகுந்து தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜபாண்டி (வயது 27) இவர் அதே பகுதியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

பள்ளி மாணவியிடம் தனது காதலை ராஜபாண்டி பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த மாணவி அதனை ஏற்காமல், படிக்கும் என்னிடம் தயவு செய்து வம்பு செய்ய வேண்டாம் எனக் கூறி திட்டி அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜபாண்டி அந்த மாணவி படிக்கும் பள்ளிக்குச் சென்று அவரது வகுப்பறையில் புகுந்து மாணவியை தாக்கியுள்ளார். இதனால் மாணவிகள் அலறல் சத்தம் கேட்டது. மேலும் பள்ளி வகுப்பறை பரபரப்பானது.

ஆசிரியர்கள் வந்ததும் கூலித் தொழிலாளி ராஜபாண்டி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருவோணம் காவல் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தார்கள். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via