சுற்றுலாயாத்திரை மூலம் இரண்டு நாடுகளின் இணைக்கும் பெருமையை பெற்றது இந்திய ரயில்வே

by Staff / 09-06-2022 05:04:42pm
சுற்றுலாயாத்திரை  மூலம் இரண்டு நாடுகளின் இணைக்கும் பெருமையை பெற்றது இந்திய ரயில்வே

சுற்றுலாயாத்திரை மூலம் இரண்டு நாடுகளை இணைக்கும் முதல் ரயில்வே என்ற பெருமையை இந்திய ரயில்வே பெறுகிறது. இராமாயணத்துடன் தொடர்புடைய புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலாப்பயணிகள்  ஒரு போல  கண்டு ரசிக்க ராமாயண யாத்ரா என்ற திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்துகிறது. டெல்லியில் இருந்து வருகிற 21-ஆம் தேதி புறப்படும் இந்த ஆன்மீக சுற்றுலா ரயில் உத்தரபிரதேசம் பீகார் ஆந்திரா தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நேபாளத்தில் உள்ள ராமாயண ஸ்தலங்களையும் ஒருங்கிணைத்து சுமார் 8000 கிலோ மீட்டர் பயணிக்கிறது மொத்தம் 600 பேர் இந்த ரயிலில் பயணிக்கலாம் ஒரு நபருக்கு 65 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

 

Tags :

Share via