மதிமுகவில் துரை வையாபுரி வரவை எதிர்த்தவர்கள் நீக்கம்-வைகோ அறிக்கை

by Editor / 29-04-2022 12:11:15pm
மதிமுகவில் துரை வையாபுரி வரவை எதிர்த்தவர்கள் நீக்கம்-வைகோ அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட. கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள். 

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் 
வைகோஅந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதிமுகவில் துரை வையாபுரி வரவை எதிர்த்தவர்கள் நீக்கம்-வைகோ அறிக்கை
 

Tags : Opponents of Durai Vaiyapuri credit in Madimuga fired - Vaiko report

Share via