சித்திரை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர்
இன்று சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுமார் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர்.கூட்ட நெரிசல் காரணமாக ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Tags :