சுடுகாட்டு இடத்தை பட்டா போட்டு கொடுத்ததைக் கண்டித்து சடலத்தை சாலையில் போட்டு ஊர் மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

by Editor / 02-05-2022 05:11:10pm
சுடுகாட்டு இடத்தை பட்டா போட்டு கொடுத்ததைக் கண்டித்து சடலத்தை சாலையில் போட்டு ஊர் மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை
மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மன்பட்டி  கிராமத்தில் இரண்டரை ஏக்கர் அரசு நிலத்தை அம்மன் பட்டி கிராம மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி வந்த நிலையில் என்ற இந்திரா என்ற தனிநபருக்கு 2 1/2 ஏக்கர் சுடுகாட்டு இடத்தை  தனிநபருக்கு பட்டா போட்டுக் கொடுத்ததை கண்டித்து இறந்தவரின் சடலத்தை சாலையில் போட்டு சுடுகாட்டுக்கு இடம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேராட்டத்தால் திருமயம் பொன்னமராவதி சாலையில் போக்குவரத்து பாதிப்பு பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான், திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

 

Tags : Condemning the firing of the crematorium, the villagers put the body on the road and blocked the road

Share via