உக்ரேனில் 3150 பொதுமக்கள் உயிரிழப்பு - ரஷ்ய படை தாக்குதல்

by Staff / 03-05-2022 12:36:53pm
உக்ரேனில் 3150 பொதுமக்கள் உயிரிழப்பு - ரஷ்ய படை தாக்குதல்

உக்ரேனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 ஆயிரத்து 150 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தேசமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்கக்கூடும், எனவும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via