ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞருக்கு நடந்தது

by Staff / 04-05-2022 12:33:02pm
ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞருக்கு  நடந்தது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22) இவர், தனியார் கேபிள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 

இவர், டிக்-டாக் ரீல் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (03.05.2022) குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via