இறந்த மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதாக புகார்

by Staff / 06-05-2022 03:54:24pm
இறந்த மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை  ஆம்புலன்ஸில்  அதிக கட்டணம் கேட்டதாக புகார்

ஆந்திராவில் தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதால் உயிரிழந்த மகளின் உடலை தந்தை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் பைக்கில் எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது .பள்ளிப் பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை அக்ஷயா வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை மீட்ட பெற்றோர் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. செய்வதறியாத தந்தை மகளின் உடலை மருத்துவமனையிலிருந்து கொத்த பள்ளிக்கு கொண்டு சென்றுள்ளார். 

 

Tags :

Share via