சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக துவாரகா - மதுரை  இடையே சிறப்பு ரயில் சேவை

by Editor / 19-04-2023 08:04:08am
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக துவாரகா - மதுரை  இடையே சிறப்பு ரயில் சேவை

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக துவாரகா - மதுரை  இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு - சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. 

இந்நிகழ்ச்சிக்காக ஏற்கனவே மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நாளை அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களில் சிறப்பு ரயில் தினமும் இரவு 10.40 மணிக்கு துவாரகா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நான்காவது நாள் காலை 10.30 மணிக்கு மதுரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில் ராஜ்கோட், சுரேந்திர நகர், அகமதாபாத், வதோரா, சூரத், நந்தர் பர், ஜல்கான், அகோலா, நன்டெட், காச்சி குடா, ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக மதுரை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக துவாரகா - மதுரை  இடையே சிறப்பு ரயில் சேவை
 

Tags :

Share via