பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வடிவத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்..
விருதுநகர் கட்டனார் பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வடிவத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்களில் 16 பேர் பெண்கள் மூன்று பேர் ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளன .இந்த விபத்தில் 11 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளின் போது ஏற்பட்ட இரண்டாவது வடிவத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 முதல் 17 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் .உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் .அமைச்சர்கள் கே. கே.எஸ்.. எஸ் .ஆர் .ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு மீட்பு பணி நடந்த பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டனர். பட்டாசுகளின்உராய்வு காரணமாக தீப்பொறியால் இந்த விபத்து நேரிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டாசு தொழிற்சாலை முறையாக அனுமதி பெறவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
Tags :



















