டெல்லியை நோக்கி படையெடுக்கும் 3 மாநில விவசாயிகள்

by Staff / 11-02-2024 01:40:12pm
டெல்லியை நோக்கி படையெடுக்கும் 3 மாநில விவசாயிகள்

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் நாளை விவசாயிகளின் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 200 விவசாய சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க இரும்பு தடுப்புக்கள் அமைத்து டெல்லி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via