பழனி முருகன் கோவில், உண்டியல் 3 கோடி வருவாய்

by Staff / 21-03-2023 04:11:07pm
பழனி முருகன் கோவில், உண்டியல்  3 கோடி வருவாய்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் 2 கோடியே 91 லட்சத்து 86ஆயிரத்து 546 ரூபாய் ரொக்கமாகவும் ,
தங்கம் 1029கிராமும்,வெள்ளி 33069 கிராமமும் ,வெளிநாட்டு கரன்சி 762நோட்டுகளும் கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகள் கோவில் அதிகாரிகள் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பணியினை சிசிடிவி மூலம் பழனி கோவில் வினை ஆணையர் நடராஜன் துணை ஆணையர் லட்சுமி பிரகாஷ் மற்றும் அறங்காவலர் குழுவினர் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனர்.

 

Tags :

Share via