முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்

by Editor / 11-01-2024 11:25:35pm
முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்

 29/05/2023 அன்று தமிழக அரசைக்கண்டித்தும், முதல்வர் பதவி விலகக்கோரியும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை  தினமணி தியேட்டர் அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மேல் அவதூறு பரப்பும் வகையில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான இறப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய  முதல்வர் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், இவற்றுக்கு முழுப் பொறுப்பேற்று நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும், பொய்யான வாக்குறுதிகளை ஊர் ஊருக்குப் போய் ஸ்டாலின் பேசினார் என்றும் நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம் சொல்லி மக்களை  மக்களை ஏமாற்றி விட்டனர் என பேசினார்.இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி தமிழக முதல்வர் சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதன்படி இன்று  மாவட்ட முதன்மை நீதிபதி  முன்பு ஆஜரானார்.

 

Tags : முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்

Share via