உப்பு தொழிற்சாலைகளில் சுவர் இடிந்து விழுந்து விபத்து 12 தொழிலாளர்கள் பலி
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.ஷால்வாடு என்னும் இடத்தில் உள்ள தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது வலுவு இழந்த சுவர் இடிந்து விழுந்ததில் 20 பேர் வரை சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர அப்போது ஈடுபாடுகளில் சிக்கி 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :