ரஷ்யாவிடமிருந்து முப்பத்தி நான்கு பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது இந்தியா

by Staff / 31-05-2022 04:36:15pm
ரஷ்யாவிடமிருந்து முப்பத்தி நான்கு பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது இந்தியா

உக்ரேன் மீதான படையெடுப்பு பிறகு 2021ஆம் ஆண்டு முழுவதும் வாங்கியதை விட மூன்று மடங்கு அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை இந்தியா வாங்கியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் 34 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மூன்றே மாதங்களில் இந்தியா  பெற்றுள்ளது. ஏப்ரலில் 7.2 மில்லியன் அளவிலான கச்சா எண்ணெய்யை பெற்ற நிலையில் இந்த மாதம் இருபத்தி நான்கு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் சுமார் இருபத்தி எட்டு மில்லியன்பிப்பாய்களை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

 

Tags :

Share via