ஆட்டோ டிரைவர் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை

by Staff / 27-10-2022 05:20:14pm
ஆட்டோ டிரைவர் திடீர் மரணம் குறித்து போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் நாகராஜன் (வயது 59). ஆட்டோ டிரைவர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்து வந்துள்ளது. அதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் ஆறுமுகநேரி மெயின் பஜாருக்கு ஆட்டோவில் சென்றார். அங்கு திடீரென்று தனியார் செல்போன் கடை முன்பு சுருண்டு கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via