எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்

by Staff / 19-07-2024 01:57:42pm
எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு தொடர்பாக பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நேற்று மேலும் ஒரு வழக்க்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via