விமான பணிப்பெண் சந்தேக மரணம்

by Staff / 04-09-2023 04:37:24pm
விமான பணிப்பெண் சந்தேக மரணம்

மும்பையில் 25 வயது பயிற்சி விமானப் பணிப்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரை சேர்ந்த ரூபால் ஓக்ரே ஏப்ரல் முதல் மும்பையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி பெற்றவர் இவர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via