செப்டம்பர் 16 விஸ்வகர்மா ஜெயந்தி

by Editor / 09-09-2021 05:40:35pm
செப்டம்பர் 16 விஸ்வகர்மா ஜெயந்தி

இந்து சமயம் ஒரு பண்டிகளின் தொகுப்புகளாகப் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு பண்டிகையும், விரதம், வழிபாடு ஆகியவை இந்து கடவுளின் முக்கியத்துவம் மற்றும் வாழ்க்கை முறையைப் பண்படுத்தும் வகையில் அமைக்கும் வகையில் உள்ளது.சுயம்புவாக உருவாகிய விஸ்வகர்மா, இந்த உலகத்தை உருவாக்கியவர் என நம்பப்படுகின்றதுவிஸ்வகர்மா ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 - 19 தேதிக்குள் கொண்டாடப்படுகின்றது. இந்த தினம் ஆவணி 31ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.சுயம்புவாக உருவானதாக கருதப்படும் விஸ்வகர்மா, இந்த உலக உருவாக்கியவர் என நம்பப்படுகின்றது. இவர் பகவான் கிருஷ்ணன் ஆண்ட துவாரகையை வடிவமைத்தவர் எனவும் கூறப்படுகின்றது.இவர் மிகச்சிறந்த கட்டிட வடிவமைப்பாளர் என்றும், நகரை வடிவமைப்பவர் என்றும் வணங்கப்படுவதால், இவரை பொதுவாக தெய்வீக தச்சன் என அழைக்கப்படுபவர் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதே போல் ஸ்தபதி வேதத்தில் இவர் மிகச்சிறந்த இயக்கவியல் மற்றும் கட்டிடக்கலை அறிவியலின் வல்லுநர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
வட இந்தியாவில் பின்பற்றப்படும் ‘கன்யா சங்கராந்தி’ எனும் இந்து நாள்காட்டியின் கடைசி மாதமான பாதோ மாதத்தின் கடைசி நாளாக கொண்டாடப்படுகின்றது.
தமிழகத்தில் ஆவணி கடைசி தேதியில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகின்றது.
அசாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டுகின்றததமிழகத்திலும் பல இடங்களில் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
பல பெரிய கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களில், விஸ்வகர்மா புகைப்படம் அல்லது சிலை வைத்து கும்பிடுவது வழக்கம். கட்டிடம் கட்ட தொடங்கும் போது விஸ்வகர்மாவுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

 

Tags :

Share via