இளம் பெண்களை விபச்சாரத்திற்கு உட்படுத்திய இரண்டு பெண் புரோக்கர்கள் கைது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ராமசாமி லே-அவுட் ரோட்டில் சென்று கொண்டிருந்த வாலிபரிடம் இரண்டுபெண்கள் வழி மறித்து எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் நீங்கள் உல்லாசம் அனுபவிக்கலாம் .என்றும் போலீஸ் தொந்தரவு இருக்காது. என்றும் கூறியுள்ளனா்.. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்த, அங்கு இருந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்தினர் .விசாரணையில், அவர்கள் பாப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபசார புரோக்கர்களான சூலூரை சேர்ந்த நிர்மலா (வயது 49), திருப்பூர் அருகே சோமனூரை சேர்ந்த சப்னா என்ற சத்யா (30) பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்இவர்கள் இருவா் மீதும் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன பின்னர் இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags :


















