மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த திமுக போஸ்டரை கிழித்த பாஜகவினர் கைது

by Editor / 12-08-2022 01:22:11pm
மேம்பால தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த திமுக போஸ்டரை கிழித்த  பாஜகவினர் கைது

கோவை அவினாசி சாலையில் மேம்பாலம் தூண்களில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக பாஜகவினருக்கு போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட தூண்களில் திமுகவினர் பேனர்களை ஒட்டி இருந்தனர். அந்த தூண்களில் தங்களுக்கு பேனர்கள் ஓட்ட வேண்டும் என கோரி கொடிசியா நுழைவு முன்பு பாஜகவினர் திரண்டனர். அங்கிருந்த போஸ்டர்களை சிலருக்கு கிழித்தபோது போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போஸ்டரை கிழித்த பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர் தொடர்ந்து பாஜகவினர் அதிகாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories