2வது திருமணம் - சகோதரியை கொலை செய்த முதியவர் கைது

by Staff / 23-04-2024 11:25:55am
2வது திருமணம் - சகோதரியை கொலை செய்த முதியவர் கைது

63 வயதான முதியவர் தனது 61 வயது சகோதரியை இரண்டாவது திருமணம் தொடர்பாக தகராறில் கொலை செய்தார். ஆலப்புழா மாராரிகுளம் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரோசம்மா என்ற மூதாட்டியை வியாழக்கிழமை முதல் காணவில்லை என உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வந்தனர். இருப்பினும், சந்தேகம் எழுந்தபோது சகோதர் பென்னி என்பவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.மே 1ஆம் தேதி ரோசம்மா 2வது திருமணம் செய்து கொள்ள தயாராகி வந்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் சகோதரியை முதியவர் கொலை செய்துள்ளார். ரோசம்மாவின் தலையில் சுத்தியலால் தாக்கி கொன்றுவிட்டு, சமையல் அறையின் பின்பக்க கதவு அருகே உடலை குழி தோண்டி புதைத்துள்ளார். இதையடுத்து குற்றவாளியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via