கறவை மாடு கடன் வழங்க தாட்கோ அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம்
விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கறவை மாடு கடன் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் சுரேஷ்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார்.
தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை செய்ததில், ரூ.34 ஆயிரம் சிக்கியது. அந்த பணத்திற்கு உரிய கணக்கு காட்டப்படவில்லை. விசாரணையில், சங்கராபுரம் அடுத்த மூக்கனூரைச் சேர்ந்த 2 பேருக்கு கறவை மாடு கடன் வழங்க தலா ரூ.17 ஆயிரத்தை சுரேஷ்குமார் லஞ்சமாக பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
Tags :