மனைவியை உற்று பார்த்தவரை துப்பாக்கியால் சுட்ட கணவன்
மத்திய பிரதேசம் மாநிலம் தமோ மாவட்டத்தில் தேவ்ரான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகதீஷ் பட்டேல். இவரது வீட்டுக்கு அண்டை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் மனக் அஹிர்வார். ஜெகதீஷ், தனது மனைவியை மனக் அடிக்கடி உற்று பார்க்கிறார் என்றும் பின்தொடர்ந்து சென்று துன்புறுத்துகிறார் என்று கூறி மனக்கிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தில் வசிக்கும் கிராமவாசிகள் தலையிட்டு, சண்டையை தடுத்து நிறுத்தி, சமரசப்படுத்தினர். எனினும், ஆத்திரம் தீராமல் நேற்று காலை, ஜெகதீஷ் பட்டேல் மற்றும் 5 பேர் ஆயுதங்களுடன் மனக் அஹிர்வாரின் வீட்டுக்கு சென்றனர். அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் நடந்து உள்ளது. இந்த முறை மனக், அவரது பெற்றோர் மற்றும் மனக்கின் சகோதரர் மீது ஜெகதீஷ் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றனர். இதில், சம்பவ இடத்திலேயே மனக் மற்றும் வயது முதிர்ந்த அவரது பெற்றோர் உயிரிழந்தனர். மனக்கின் சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :