ரயிலில் திடீரென புகை வந்ததால் அதிர்ச்சி

by Staff / 13-07-2023 02:35:06pm
ரயிலில் திடீரென புகை வந்ததால் அதிர்ச்சி சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் இருந்து திடீரென புகைவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஏசி டபுள் டக்கர் ரயிலில் மக்கள் வழக்கம் போல் பயணம் மேற்கொண்டு இருந்தனர். ரயில் வேலூர் - குடியாத்தம் அருகே சென்று கொண்டிருக்கும்போது சி6 பெட்டியில் திடீரென புகை வந்ததால் மக்கள் அனைவரும் பதற்றத்துடன் ரயிலில் இருந்து இறங்கி உள்ளனர். பிரேக் பைண்டிங் ஆன காரணத்தால் அதிகப்படியான புகை வந்ததால் பழுது பார்க்கப்பட்டு 15 நிமிடத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
 

Tags :

Share via

More stories